அரச உழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு நாளைய(புதன்கிழமை) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அதன்படி அரசாங்கத்தின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கத்தின் பதவி நிலை கொண்ட அதிகாரிகளின் சம்பளத்தை தாமதித்து வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.